தமிழா தலை நிமிர்...

Sunday, March 29, 2009

பொது இடத்தில் எச்சில் துப்பினால் நாடு கடத்தல்!

பொது இடங்களில் எச்சில் துப்பினால் நாடு கடத்தப்படுவீர்கள் என்று வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு துபாய் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


பாகிஸ்தான், இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்கள் வெற்றிலையை போட்டு குதப்பும் பழக்கம் கொண்டுள்ளனர்.

இவர்கள் வெற்றிலையை மென்று புளிச், புளிச் என்று கண்ட இடங்களில் துப்பி வைத்து விடுகின்றனர். இதனால் பொது இடங்கள் பலவற்றில் சிவப்பு கறைகள் பெருமளவில் தென்படுகின்றன.

நகரமே அசிங்கமாகி விடுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இந்நிலையில், இந்த செயலை தடுப்பதற்காக துபாயில் அதிரடி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி பொது இடங்களில் வெற்றிலையை மென்று எச்சில் துப்புபவர்களை பிடித்து அவர்களின் சொந்த நாட்டுக்கு, உடனடியாக நாடு கடத்திவிட துபாய் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பும் முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது. துபாயில் யாரும் வெற்றிலை சாப்பிடுவதில்லை.

ஆசிய நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்கள்தான் இந்த பழக்கத்தை தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பரப்பி விட்டுள்ளனர். பொது இடங்கள் அசிங்கம் ஆவதை தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத

வருண்காந்தி மீது தே.பா.சட்டம் பாய்ந்தது

வருண்காந்தி மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. உத்திரபிரதேச போலீசார் அதிரடியாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுபாண்மையினருக்கு எதிராக பேசியதாக ஏற்கெனவே வருண்காந்தி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரசாரத்தின்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக உத்தரபிரதேசம் போலீசார் வருண்காந்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர் பீலிபட் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

அவரை முறைப்படி கைது செய்தனர். பின்னர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அது நாளை விசாரணைக்கு வருகிறது. ஜாமீன் கிடைத்தால் நாளை விடுவிக்கப்படுவார். இல்லை என்றால் மேலும் சில நாட்கள் ஜெயிலில் இருக்க வேண்டியது வரும்.

வருண் காந்தி நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக பாரதீய ஜனதா தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வருண் காந்தியை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்ததுடன் போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் போலீசார் தடியடி நடத்தியதுடன் துப்பாக்கி சூடும் நடத்தினார்கள்.

வன்முறை நடந்ததால் உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதி கடும் கோபம் அடைந்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

வருண் காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார்.

இது தொடர்பாக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் பீலிபட் மாவட்ட கலெக்டர் இதுபற்றி கூறும்போது வருண்காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் வருண்காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

வன்னியில் இன்று 16 சிறுவர்கள் உட்பட 49 தமிழர்கள் படுகொலை

வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி சிங்கள படையினர் இன்றும் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 16 சிறுவர்கள் உட்பட 49 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வலைஞர்மடத்தில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளன் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அம்பலவன்பொக்கணையில் உள்ள பிள்ளையார்கோவில் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால், இடைக்காடு மற்றும் பச்சைப்புல்மோட்டைப் பகுதிகளை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 125 பேர் படுகாயமடைந்துள்ளனர்

சன் தொலைக்காட்சியின் „அயன்“ திரைப்படத்தை புறக்கணிப்போம்!

அன்பான தமிழ் மக்களே

தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசு கொடிய போரை ஏவி விட்டுள்ளது. தினமும் பல நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொடிய இன அழிப்பு யுத்தத்தை இந்தியாவின் காங்கிரஸ் அரசு வழி நடத்தி வருகின்றது.

இந்த நிலையில் சிறிலங்காவின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை எமது மக்கள் தன்னெழுச்சியோடு முன்னெடுத்து வருகின்றார்கள். அதே வேளை சிறிலங்கா அரசுக்கு முண்டு கொடுத்து யுத்தத்தை வழிநடத்தும் காங்கிரஸ் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்கும் தமிழ் நாட்டு ஊடகங்களுக்கும் எமது எதிர்ப்புகளை நாம் தெரிவிக்க வேண்டும்

தமிழ் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகளான சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் புலம்பெயர் நாடுகளிலும் தமது ஒளிபரப்பை நடத்தி வருகின்றன. இந்தத் தொலைக்காட்சிகள் தமிழர்களுக்கு எதிரான செய்திகளை காவி வருவதோடு, தமிழின எதிரிகளை நியாயப்படுத்தும் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன.

எமது மக்களின் அவலங்களை வெளிப்படுத்த வேண்டிய கடமையுள்ள தமிழ் ஊடகங்கள் எமது மக்களை அழிப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தத் தொலைக்காட்சிகளுக்கு நாம் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

சன் தொலைக்காட்சி "சன் பிக்ஸர்" என்ற பெயரில் திரைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றது. இந்தத் திரைப்படங்கள் வெளிநாடுகளில் திரையிடப்படுவதன் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை சன் தொலைக்காட்சி பெறுகின்றது. எமக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு, எம்மிடம் இருந்தே பெருந் தொகை வருவாயையும் பெறுகின்றது.

சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றவற்றையும் இவைகளின் சார்பில் வெளிவரும் திரைப்படங்களையும் புறக்கணித்து நாம் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

சன் தொலைக்காட்சியின் வெளியீடாக அடுத்து வரவுள்ள "அயன்" திரைப்படத்தை புறக்கணித்து நாம் எமது எதிர்ப்பை தெரிவிப்போம். இந்தத் திரைப்படத்தை புலம்பெயர் நாடுகளில் திரையிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை நாம் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நடவடிக்கை அயன் திரைப்படத்தில் நடிப்பவர்களுக்கோ, தமிழ் திரையுலகத்திற்கோ எதிரானது அன்று என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைக்கு எமக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழ் திரையுலகத்திற்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ரஜனிகாந்தின் ரசிகர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகளுக்கே வாக்களிப்பதாக தீர்மானித்துள்ளதையும் நாம் மிகவும் பாராட்டி அவர்களுக்கும் எமது அன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

"அயன்" திரைப்படப் புறக்கணிப்பு என்பது சன் குழுமம் மற்றும் கலைஞர் குடும்பத்திற்கு எமது அதிருப்தியையும், வேதனையையும், கோபத்தையும் தெரிவிக்கும் ஒரு நடவடிக்கையே தவிர வேறு யாருக்கும் எதிரானது அன்று.

சன் மற்றும் கலைஞர் குழுமத்தின் இன்றைய நிலைப்பாட்டிற்கு எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் சன் தொலைக்காட்சியின் "அயன்" திரைப்படத்தை புலம்பெயர் நாடுகளில் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும்படி அனைத்து தமிழ் மக்களையும் உரிமையோடும் அன்போடும் வேண்டிக் கொள்கிறோம்.


ஒற்றுமையே வலிமை
வலிமையே வாழ்வு

தமிழர் விழிப்பு இயக்கம்

தொடர்புகளுக்கு: thamilarvilippuiyakkam2009@gmail.com

தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் நாளுக்குள் முற்றாக அழித்து விடுமாறு இந்திய ஆளும் கொங்கிரஸ் கட்சி சிறீலங்கா அரசுக்கு உத்தரவு..


தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் நாளுக்குள் முற்றாக அழித்து விடுமாறு இந்திய ஆளும் கொங்கிரஸ் கட்சி சிறீலங்கா அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் நாள் முதல் மே 13ஆம் நாள்வரை நடைபெறவுள்ள நிலையில், இந்த உத்தரவை சிறீலங்கா அரசுக்கு கொங்கிரஸ் கட்சி பிறப்பித்திருப்பதாக, கொங்கிரஸ் கட்சியின் நம்பகமான உள்ளக வட்டாரங்கள் மூலம் தமிழ்நாட்டில் தகவல் கசிந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதன்மூலம், அடுத்த தேர்தலில் தாம் வெற்றிபெற முடியும் என கொங்கிரஸ் கட்சி திடமாக நம்புவதால், இந்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள தி.மு.க கட்சி உடந்தையாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மற்றொரு பிரதான கட்சியான ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, இடதுசாரி மற்றும் பொதுவுடமைக் கட்சிகளுடன் நெருங்கிய உறவைப்பேண ஆரம்பித்திருப்பதாலும், ஈழ ஆதரவுக் கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என்பதாலும், கொங்கிரசுடன் இணைந்திருப்பதே தமக்கு தேர்தல் வெற்றியை ஈட்டித்தரும் என எண்ணும் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க, ஈழத்தில் தமிழினப் படுகொலையைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, தமிழ்நாட்டிலுள்ள தமிழின உணர்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

வரலாற்றுச் சுருக்கம்

ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று தனித்துவங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு எஞ்சியுள்ள தனித்துவத்தினை பேணிப்பாதுகாப்பதில் முன்னின்று செயற்படும்இக்காலகட்டத்தில் எமது வரலாறு பற்றி எழுதுவதும் அவற்றைப் படிப்பதும் அறிவது அவசியமாகிறது. எனவே எமதுஇந்த முயற்சிகள் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு எமது தொன்மையான வரலாறு பற்றியும்.அதில் எமது தனித்துவம் பற்றியும் அதன் தார்ப்பரியம் பற்றியும் உணரக்கூடியதாக எடுத்தியம்பும் என நினைக்கிறோம்.

ஈழத்தமிழரை பொறுத்தவரையில் எங்களுடைய வரலாறு என்பது மிகத்தொன்மையானது பல நூற்றான்டு காலம் தொடர் வரலாற்றைக் கொண்டதுமாகவே காணப்படுகிறது. வரலாறு என்பது மிகத்தொன்மையானது பல நூற்றாண்டு காலம் தொடர் வரலாற்றை கொண்டதுமாகவே காணப்படுகிறது. வரலாறு என்பது எழுதப்படுவதற்கு முன் நிலவிய குறுனிக் கற்கால பண்பாட்டுடன் ஆரம்பமாகி பெருங்கற்காலப் பண்பாடு கதிரமலை அரசு சிங்கைநகர் அரசு என இருந்த போதும் கி.பி 09ம் நூற்றாண்டில் இருந்து 13ம் நூற்றாண்டுவரை சோழர்களின் ஆட்சியில் இவர்களை அடுத்த 13ம் நூற்றாண்டில் இருந்து யாழ் இராச்சியம் ஊடாக ஒரு தொடர் வரலாற்றைக் கொண்டிருந்த மக்களாகவே ஈழத்தமிழருடைய வரலாறு அமைகிறது.

நீண்டகாலமாக தமக்கென இலங்கைத்தீவில் வடக்கு-கிழக்கைக் கொண்ட ஒரு தாயகப் பிரதேசத்தைத் தன்னகத்தே கொண்டிருந்த போதும் இதில் தமெக்கென ஓர் அரசை உருவாக்கி ஈழத்தமிழரிடையே அரசியல் பொருளாதார சட்டதிட்டங்களை மற்றும் தலைவிதியையும் நீண்டகாலமாகவே தீர்மானித்து வந்தார்கள். இதன் நிமித்தம் தேசிய விழுமியங்கள் நன்கு வளர்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டுமே வந்துள்ளது.

19ம் நூற்றாண்டின் பின் ஈழத்தமிழரின் வடக்கு கிழக்கு இணைந்த தாயகப்பகுதியும் மற்றும் அரசுரிமையும் ஏகாதிபத்தியங்களின் கைகளுக்கு மாறியதும் தேசிய விழுமியங்கள் படிப்படியாக சிதைக்கப்பட்டு இறுதியில் தாயகப்பகுதியும் சிங்கள தேசத்தோடு இணைக்கப்பட்டதோடு ஈழத்தமிழர் தனது தன்னாட்சி உரித்தை முற்று முழுதாக இழந்தனர். அது மட்டுமல்லாமல் ஆங்கிலேயர் ஈழத்தமிழரின் அரசியல் தலை விதியை சிங்கள ஆட்சியாளர்களின் கைகளில் கையளித்தே இன்று ஈழத்தமிழர்கள் இழந்த தமது தன்னாட்சி உரித்தை வென்றெடுக்கவே ஓர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றன.

Tuesday, March 24, 2009

கனடாவில் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம்..


சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் கனடாவின் ரொறன்ரோ வாழ் தமிழ் இளையோர்களால் நேற்று முன்நாள் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலைக்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டங்களின் தொடர்ச்சியாகவே இப்புறக்கணிப்புப் போராட்டமும் நடைபெற்றது.

சிறிலங்காவினால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் முக்கிய நுகர்வாளர்களாக இருப்பவர்கள் புலம்பெயர் வாழ் தமிழர்கள்.

தமிழர்களை இன அழிப்புச் செய்யும் சிறிலங்காவின் பொருட்கள், சேவைகளை நுகர்வதன் மூலம் தமிழர்களை அழிப்பதற்கான நிதியினை சிறிலங்கா அரசுக்கு வழங்கிக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே 'சிறிலங்காவைப் புறக்கணிப்போம்' என்னும் இப்போராட்டம் நடத்தப்பட்டது.

பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இப் புறக்கணிப்புப் போராட்டத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.

அங்கு நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த சிறிலங்கா நாட்டின் கொடியின் மேல் மக்களால் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட உற்பத்திப் பொருட்கள் கொட்டப்பட்டு பின்னர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.

அத்துடன் அங்கு நின்றிருந்த மக்கள் அனைவரும்

- சிறிலங்காவைப் புறக்கணிப்போம்

- சிறிலங்கா பொருட்களைப் புறக்கணிப்போம்

- சிறிலங்காவின் சேவைகளைப் புறக்கணிப்போம்

எமது மக்களை நாம் பாதுகாப்போம் என்று உறுதி எடுத்துக்கொண்டனர்.

Saturday, March 21, 2009

விடுதலைப் புலிகளின் கொடியினை தாங்கிச் செல்வது சட்டபூர்வமானது: கனடா

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள போதும் அவர்களின் கொடியினை தாங்கிச்செல்வது சட்டபூர்வமானது என கனடா நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளதாக கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களை நிறுத்துமாறு கோரி கனடாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் போராட்டங்களில் அண்மையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது பெண்களும், சிறுவர்களும், ஆண்களும் விடுதலைப் புலிகளின் கொடியினை வெளிப்படையாக அசைத்து தமது ஆதரவுகளை தெரிவித்திருந்தனர்.

அங்கு தனிநாடு கோரி வரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடி அதுவாகும்.

இதனைத்தொடர்ந்து, கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கொடியினை தாங்கிச் செல்வது சட்டபூர்வமானதா என ஆராயப்பட்டது.

ஆனால், அது சட்டவிரோதமற்றது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் மார்க் போகேஷ் தெரிவித்துள்ளார்.

எமது வழக்கறிஞர்களிடம் இருந்து நாம் ஆலோசனைகளை பெற்றுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என் உயிருக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகள்தான்:வைகோ

மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த தமிழக அரசை கண்டித்து கோவை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்றுக்காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்துக்காக ஒரு லாரியில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர்,

’’உலக நாடுகள் கொடுக்கும் ஆயுதங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு ஈழ தமிழர்களை அழித்து வரும் இலங்கை ராணுவத்தை எதிர்த்து எந்த நாடும் உதவி செய்யாத நிலையிலும் போராடி வரும் விடுதலைப்புலிகளை ஆதரித்தார் என்பதற்காக நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


அதே போல எங்களையும் சிறையில் அடைத்து நிராயுதபாணியாக்கி தேர்தலை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நான் பேசினேன். நான் பேசியதை இங்குள்ள நூற்றுக்கணக்கானவர்கள் திருப்பி சொல்லியுள்ளனர். எனவே இவர்கள் அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வீர்களா?

அப்படியென்றால் ஒட்டு மொத்த தமிழகத்தையும் சிறைச்சாலை ஆக்குவீர்களா?. தமிழகத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை. தமிழனத்துக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சிக்கு வரக்கூடாது.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்குங்கள். அதனை வாங்கி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு அனுப்பலாம்.

ஐக்கிய நாடு பாதுகாப்பு சபையினால் மட்டுமே இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய முடியும். ஆனால் அந்த சபையில் தீர்மானம் கொண்டு வர விடாமல் இந்தியா தடுக்கிறது.

புலிகளை அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என்று ராஜபக்சே கூறுகிறார். ஆனால் விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது. அவர்களை நெருங்க கூட முடியாது.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இங்கு இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். கோவை மாவட்டத்தில் ம.தி.மு.க. பலவீனமடைந்து விட்டது என்று யாரோ சொல்கிறார்கள். ஆனால் இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

பிள்ளை பிடிக்கிற கூட்டம் போல ஆட்களை பிடிக்கிறார்கள். 1993-ல் எங்களோடு வந்தவர்களுக்கு பதவி தருகிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை.

என்னை கள்ளத்தோணியில் சென்று வந்தவன் என்றும், உயிர் பிச்சை கொடுத்ததாகவும் முதல்-அமைச்சர் சொல்கிறார். ஆனால் உண்மையில் என் உயிருக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான்.

சுற்றி நின்று தாக்குதல் நடத்திய போதிலும் என்னை பாதுகாத்து அனுப்பி வைத்தவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களில் சரத் என்கிற பீட்டர் கென்னடி என்பவரும் ஒருவர். அவருடைய பெயரை தான் நாஞ்சில் சம்பத் தனது மகனுக்கு வைத்துள்ளார்’’ தெரிவித்துள்ளார்.

Friday, March 13, 2009

ஆட்லறிப் படைத் தள அழிப்பில் வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகளுடன் தமிழீழத் தேசியத் தலைவர்



ஆட்லறிப் படைத் தள அழிப்பில் வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகளுடன் தமிழீழத் தேசியத் தலைவர்

தேராவில் பிரதேசத்தில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் பாரிய ஆட்லறிப் படைத் தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் செவ்வாய்கிழமை அதிகாலை தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.

கரும் புலிகள் படையணியும், கிட்டுப் பீரங்கிப் படையணியும் இணைந்து நடத்திய இந்த வெற்றிகரத் தாக்குதலில் ஆறு ஆட்லறிகளும் மற்றும் வெடி பொருட்களும் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளன. இதில் 50ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

மூன்று கரும்புலிகள் உட் பட ஏழு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் கரும்புலிகள் எடுத்துக்கொண்ட நிழற்படங்களை ஈழநாதம் இதழ் நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த வெற்றிகரத் தாக்குதலில் ஈழ

கரும்புலி லெப்.கேணல்மாறன்

கரும்புலி மேஜர் தமிழ்மாறன்

கரும்புலி கப்டன் கதிர்நிலவன்

மேஜர் மலர்ச்செம்மல்

கப்டன் ஈழவிழியன்

கப்டன் காலைக்கதிரவன்

கப்டன் கலையினியவன்


ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தூரிகைகளின் துயரப்பதிவுகள்


சென்னையில் கருத்துரிமைக் களம் என்கிற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'தூரிகைகளின் துயரப்பதிவுகள்' என்னும் தூரிகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ஓவியர்கள் போருக்கு எதிராக ஓவியங்களை வரைந்தார்கள்.

சென்னையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரபல ஓவியர்கள், ஓவியக்கல்லூரி மாணவர்கள், பிரபல கேலிச்சித்திரம் வரைபவர்கள், காட்சி ஊடக மணவ மாணவிகள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பிரபல கேலிச்சித்திரம் வரைவபரான மதன் நிகழ்வினை தொடக்கி வைக்க, சென்னை ஓவியக்கல்லூரி முதல்வரும் ஓவியருமான சந்துரு ஓவியம் வரைந்தார். பிரபல ஒவியர்களான வீரசந்தானம், மணியன் செல்வம், அரஸ், மாருதி, விஸ்வம், ஸ்யாம், மனோகர், நெடுஞ்செழியன், போன்ற பல பிரபல ஓவியர்களும் தங்கள் உணர்வுகளை ஓவியமாக வெளிப்படுத்தினார்கள். வரைந்து முடிந்த ஓவியங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்த போது பலரும் வந்து பார்த்து மனம் கலங்கிச் சென்றனர்.

இந்த ஓவியங்களை தியாகி முத்துக்குமார் நினைவோடு இணைத்து தமிழகம் எங்கும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவும் ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூரிகைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை வாழ்த்தி உரையாற்றிய போது திரைப்பட பாடலாசிரியர் தாமரை தெரிவித்துள்ளதாவது:

"இவ்வளவு எதிர்ப்புக்கள் இருந்தும் இன்னும் இந்தப் போரை இலங்கை பேரினவாதிகள் நடத்துகிறார்கள் என்றால் அது இந்தியா கொடுக்கிற ஆதரவில்தான்.

இந்த லட்சணத்தில் இந்திய இறையாண்மை தொடர்பாக வாய் கிழியப் பேசுகிறார்கள் இவர்கள். இந்திய இறையாண்மைக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு வேட்டு வைக்கின்றது அதுதான் உண்மை.

வன்னியில் இரண்டு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்று சொன்ன பேரினவாதிகள் இப்போது எழுபதாயிரம் மக்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி என்றால் ஒரு லட்சம் மக்களை குண்டு வீசிக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறர்கள் என்று தானே பொருள்.

தமிழக மக்களுக்கு பதில் சொல்லும் காலம் இன்று வந்திருக்கிறது. ராஜீவ் கொலையால் 18 ஆண்டு காலம் நம்மை தண்டித்தார்கள். இதே 18 ஆண்டு காலம் நாம் காங்கிரசை தண்டிக்க வேண்டும். அதற்கான துருப்புச் சீட்டுதான் இப்போது நம்மிடம் இருக்கிறது" என்று உணர்வுபூர்வமாக உரையாற்றினார் கவிஞர் தாமரை.

கருத்துரிமைக் களத்தின் அமைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான புகழேந்தி கலந்து கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்திய ஓவியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தில் இலங்கை ஆதரவுக்கு தடை : இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க இருக்கிறது. தற்பொழுது இலங்கை பிரச்சினையானது இந்திய அரசியலில் பெரியளவில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் இலங்கை ஆதரவை ஒடுக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்திய அரசியலில் இலங்கை மக்களது பிரச்சினை பெரிதளவு பேசப்பட்டு வருகின்றது. இலங்கை மக்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களிடத்தில் அவர்களின் நிலையை எடுத்துச் சொல்லும் வகையில் மனித நேயமிக்க அரசியல் கட்சிகளும், அரசியல் சாரா அமைப்புகளும் அறிக்கைகளையும், சுவரொட்டிகளையும், பதாகைகளையும் வைத்து மக்களிடத்தில் தமிழுணர்வை ஊட்டி வருகின்றன.

தமிழகத்தில் எழுந்துள்ள இலங்கை ஆதரவானது தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய முழுமைக்கும் ஒரு அரசியல் மாற்றத்தினை அமைக்கும் விடயமாக எழுச்சி பெற்றுள்ளது. இந்நிலையில், இவ்வெழுச்சியை ஒடுக்கும் வகையில் இலங்கை சார்ந்த எவ்வித அறிக்கைகளும், சுவரொட்டிகளும், பதாகைகளும் அச்சடிக்கக் கூடாது என்று அச்சகத்தினர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது.

மீறி அச்சடித்தால் அச்சகத்தினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோடீஸ்வர அந்தஸ்தை இழந்த 29 இந்திய தொழிலதிபர்கள்: லட்சுமி மிட்டலை முந்தினார் முகேஷ் அம்பானி

நியூயார்க்: உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்தியாவின் லட்சுமி மிட்டலை விட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலில் உள்ளதாக, அமெரிக்காவின் "போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, அமெரிக்காவின் "போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகின் பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவின் முகேஷ் அம்பானி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 97 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இவருக்கு அடுத்த இடத் தில் இந்தியாவின் லட்சுமி மிட் டல் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 96 ஆயிரத்து 500 கோடி ரூபாய். கடந்தாண்டு பணக்காரர்கள் பட்டியலில் லட்சுமி மிட்டல் நான்காவது இடத்திலும், முகேஷ் அம் பானி ஐந்தாவது இடத்திலும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் பொருளாதார மந்த நிலையால் அதிகளவு நஷ்டமடைந்ததால், கோடீஸ்வரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் கடந்தாண்டு ஆறாவது இடம் பெற்ற அனில் அம்பானி, இந் தாண்டு 34வது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 50 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் மூன்றில் இரண்டு பங்கு ஷேர்கள் சரிந்ததால், இந்தாண்டு மிக அதிகளவில் நஷ்டமடைந்தார்.போன் பேச்சு குறைவு: தொலைபேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், பொரு ளாதார நெருக்கடியால், மக்கள் குறைந்த நிமிடங்களே பேசுகின்றனர். மேலும், இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி, பங்குச் சந்தை நெருக்கடி, அதிகரித்து வரும் போட்டி போன்றவற்றால் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. இவரின் சொத்து மதிப்பு, கடந் தாண்டை விட கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது.

ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி : உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்தியாவின் கே.பி.சிங், தற் போது 98வது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளார். கடந்தாண்டு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இவரின் சொத்து மதிப்பு இந்தாண்டு, 25 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.உலக கோடீஸ்வரர்கள் கிளப்பிலிருந்து விஜய் மல்லையா, துளசி தாண்டி, ஆனந்த் ஜெயின் உட்பட 29 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர்.இவ்வாறு "போர்ப்ஸ்' பத்திரி கை செய்தியில் கூறப் பட் டுள் ளது.இந்நிலையில், கடந்த மாதம் இந்திய அரசு, 9 லட்சத்து 53 ஆயிரத்து 231 கோடி ரூபாய்க்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. இது, நாட்டின் கோடீஸ் வரர்களின் மொத்த சொத்து மதிப் பில் இரண்டு மடங்கு குறைவு.
ஆனால், அமெரிக்க பெடரல் அரசு கடந்த மாதம் 2010ம் ஆண் டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த பட்ஜெட்டின் மதிப்பு, அமெரிக்க கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த இழப்பு எவ்வளவு?
*உலகில் உள்ள அனைத்து கோடீஸ்வரர்களுக்கும் ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு 100 லட்சம் கோடி ரூபாய்.
* கடந்த ஆண்டு 1,125 ஆக இருந்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை, தற்போது 793 ஆகக் குறைந்துள்ளது.
* கடந்த 2003ம் ஆண்டுக்கு பின், தற்போது முதல் முறையாக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது.
* உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள பில்கேட்சின் சொத்து மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய்.
* முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில், முதலிடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் கேட்ஸ் உள்ளார். அவரது சொத்து மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய். இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்க வாரன் பபெட் சொத்து மதிப்பு 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய்.

Thursday, March 12, 2009

அமெரிக்காவே இலங்கையை நம்பாதே. -பழா.நெடுமாறன்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வேலூரில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி பேசுகையில்,


முத்துக்குமார் தொடங்கி இதுவரை 10 பேர் இலங்கை தமிழருக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித் துள்ளனர். ஆனால், இந்திய அரசு இதுவரை அங்கு போர் நிறுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இப்பிரச்னையின் விளைவாக நம்மிடையே எழுந்துள்ள இந்த ஒற்றுமை, தமிழர் உணர்வை தொடர்ந்து சரி யான திசையில் கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் இலங்கை தமிழர் மட்டுமல்ல தமிழகத்தின் நீராதார பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான வேளை இப்போது வந்து விட்டது என்றார்.

இலங்கை தமிழர் பிரச்னையில் அந்நாட்டு அரசு கூறும் வார்த்தையை அமெரிக்கா நம்பக்கூடாது என்றார்.

ஈழத் தமிழர்களுக்கு உணவு - காங்கிரஸ் தேர்தல் நாடகம் ஆரம்பம்

இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் நிவாரணப் பொருட்களை திரட்ட கொங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகவும், வரும் 12ஆம் திகதி முதல் நிவாரணப்பொருட்கள் திரட்டப்படும் என்றும் அக்கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 12ஆம் திகதி முதல் இலங்கைத் தமிழர் நிவாரண உதவி என்ற பெயரில் அவர்களுக்கான புதிய வேட்டி, சேலைகள் மற்றும் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் பொதுமக்களை கட்டாயப்படுத்தாமல் அவர்களுடைய முழு விருப்பத்தின் பேரில் திரட்டப்படும்.

இந்த உதவிப் பொருட்களை காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் வரும் 15ஆம் திகதிக்குள் சத்தியமூர்த்தி பவனுக்கு அனுப்பி வைப்பார்கள். இதேபோல புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்கு உதவிப் பொருட்கள் திரட்டப்படும்.

இவற்றை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை குழு மூலம் இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அனுப்பி வைப்போம். பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காகத்தான் இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்கிறோம் என்றார்.

இலங்கையில் தமிழினப் படுகொலையில் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியே ஈடுபடும், சிறிலங்கா இராணுவத்திற்கான முழுமையான உதவிகளை வழங்கிவருவதும் தெரிந்ததே. இத்தனை நாட்களும் மக்கள் பெரும் அழிவுகளைச் சந்தித்தபோது அதனைத் தடுத்து நிறுத்ததாத கொங்கிரஸ் தற்போது இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் இவ்வாறான உணவு சேகரிப்பில் இறங்கியுள்ளது.

ஏற்கனவே தி.மு.க. அரசினால் அனுப்பப்பட்ட பொருட்களே மக்களை சென்றடையாமல் பெருமளவில் சிங்களவர்களையே சென்றடைந்துள்ளது. இந்நிலையில், போரை நிறுத்தாமல் இந்தப் பொருட்கள் எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையும் எனக் கேள்வி எழுப்பியுள்ள தமிழின உணர்வாளர்கள் தமிழக மக்கள் இவர்களின் இந்த தேர்தல் நாடகத்தை புரிந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

வைகோவுக்கு பிரதமர் எழுதிய கடிதம்

இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க இந்திய அரசு ராணுவ உதவி செய்கிறது:வைகோவுக்கு பிரதமர் எழுதிய கடிதம்

சேலத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நேற்று சேலம் வந்திருந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம்,

’’இலங்கையில் தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கும் வேலையில் ராஜபக்சே அரசு இறங்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசக்கூடாது என்றும் கூறியுள்ளன.

ஆனால் இந்திய அரசு இதுவரை ஏன் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தவில்லை. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்தியாதான் காரணம்.

பிரதமர் மன்மோகன் சிங், கடந்த அக்டோபர் 2ம் தேதி எனக்கு எழுதியிருந்த கடிதத்தில், இலங்கையில் நடக்கும் பிரச்னை உள்நாட்டு விவகாரம். இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க இந்திய அரசு ராணுவ உதவி செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ உதவிகள் மட்டுமின்றி, பண உதவியும் இந்திய அரசு செய்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.

கிழக்கில் 49 ஆயிரம் விதவைகள் - மாகாண அமைச்சர் தகவல்

கிழக்கில் இதுவரை 49 ஆயிரம் விதவைகள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 19, 000 பேர் 40 அகவைக்கு உட்பட்டவர்கள் என்றும் 12,000 பேர் மூன்று மற்றும் அதந்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் மாகாணசபை அமைச்சர் ஒருவர் தொவித்துள்ளார்.

போர் சூழ்நிலை காரணமாக இந்த விதவைகளின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும், பெரும்பாலானவர்கள் உள்ளக இடம்பெயர்வுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர் பதிவின் மட்டக்களப்பு செய்தியாளருக்கு தொவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மற்றும் ஆயுதக்குழுக்களால் கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்தும் படையினர் மற்றும் ஆயுதக்குழுக்கள் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் கூறினார்.

இதனால் அக்குடும்பங்களின் தலைவியரின் மனோநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் தமது குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் கவலை வெளியிட்டார்.

அண்மையில் 14 அகவையுடைய சிறுமி ஒருவர் மட்டக்களப்பில் அவரது தாயார் முன்னிலையில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையானோ, அமைச்சர் கருணாவோ இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியல்வாதிகளின் கையில் சிக்கிய ஈழப்பிரச்சினை


தமிழக அரசியல்வாதிகளின் கையில் சிக்கிய ஈழப்பிரச்சினை படாதபாடு படுகிறது. ஒவ்வொரு கட்சியும் ஈழத்திற்காக உண்மையாக குரல் கொடுப்பதை தவிர்த்து வருகின்றன என்ற போதிலும் அதையே திரித்து தாங்கள் வெட்டிக் கிழிப்பது போல காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன.

செத்து விழும் ஈழத்து மக்களின் பிணம் கணக்கின்றி செல்வது போல இவர்களின் நாடகமும் முடிவின்றி செல்கின்றது. தாங்கள் ஈழத்து மக்களை நினைத்து கண்ணீர் உருகுவது போல காட்டுவதற்காக நடத்தப்படும் காட்சிகள் தான் தமிழகத்தின் தற்போதைய அரசியல் மேடையை ஆக்கிரமித்து வருகிறது.அதனால்தான் தன்னெழுச்சியாக வளரும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் இவர்களின் கைபட்டு நீர்த்துப் போகின்றன.

இந்தியாவின் ஆயுத உதவியும் ஆள் உதவியும் இலங்கை இராணுவத்திற்கு அளவின்றி வழங்கப்படுகிறது என்ற உண்மை இப்போது மக்களுக்கு தெரியும் என்பதால் தி.மு.க கூட்டணி கட்சிகள் அதை மறைப்பதற்கு தேவையான நாடகத்தை நாள்தோறும் நடத்தி வருகின்றன. மத்திய அரசுக்கு தந்தி மனிதச் சங்கிலி பிரணாப் பயணம் மீண்டும் மனிதச் சங்கிலி என்று தொடங்கிய இடத்திற்கே வந்திருக்கிறது தி.மு.கவின் சுற்று அரசியல்.

இதில் வில்லன் பாத்திரத்தை ஏற்றிருக்கும் காங்கிரசு கட்சி கூட ஈழத்திற்காக போராடுகிறது என்று வெட்கமில்லாமல் தங்கபாலுவின் தலைமையில் அறிக்கைகள் விட்டு வருகிறது. ஆனால் இலங்கைக்கு உதவும் மத்திய அரசின் கொள்கை சரியானது என்று மயிலை மாங்கொல்லையில் நடந்த கூட்டத்தில் கொக்கரித்திருக்கிறார் ப.சிதம்பரம். போர் நிறுத்தம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தரும் எந்த கோரிக்கையையும் வைக்க முடியாது என்றும் அவர்கள் ஆயுதங்களைத் துறந்துவிட்டு சரணடைவு மூலம் பேச வேண்டுமெனவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதைத்தான் ராஜபக்க்ஷே அரசு பேசி வருகின்றது.

இந்த முகாந்திரத்தில்தான் முல்லைத்தீவில் சிக்கியிருக்கும் மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகின்றனர். ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசின் போர் நிறுத்தப் படவேண்டும் என்று நாம் கோரினால் இல்லையில்லை விடுதலைப்புலிகளை வீழத்தும் வரை போர் தொடரும் என்று இனப்படுகொலையை நியாயப் படுத்துகிறார்கள். மேலும் புலிகளை ஒழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமும் அழிக்கப்படுகிறது.

ஆயுதங்கள் வைத்திருக்கும் எந்தப் பிரிவினரோடும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு பேச முடியாது என்று சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார் ப.சிதம்பரம். ஆனால் இவர்கள் அரசு ஆந்திராவில் மாவோயிஸ்ட்டுகளோடு பேச்சுவாரத்தை நடத்தியதும் எட்டு ஆண்டுகளாக நாக விடுதலைப்படையோடு நாகலாந்தில் பேச்சு வார்ததை நடத்தி வருவதும் எப்படி நடந்தது? இதுதான் நீதி என்றால் பாலஸ்தீனத்து மக்களோடு எவரும் பேச முடியாது என்றாகிறதே? இசுரேல். பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்வதும் ஈராக்கில் அமெரிக்கா அப்பாவி மக்களை கொன்று குவித்து வருவதும் உண்மையாக இருந்தாலும் இவர்களை எதிர்த்துப் போராடும் மக்கள் பிரிவினர் ஆயுதங்களை ஏந்தினால் அது தவறு என்றால் எதுதான் சரி?

பிரச்சினை விடுதலைப்புலிகள் ஆயுதங்களை வைத்திருக்கிறார்களா துறந்தார்களா என்பதல்ல. ஈழத்த் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்கப்படவில்லை என்பதுதான் பிரச்சினை. இந்தப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் பல தவறுகளை இழைத்திருக்கிறார்கள் என்றாலும் அது ஈழத்து மக்களின் பிரச்சினை. புலிகள் போரை நிறுத்தட்டும் ஈழத்திற்கு சுய நிர்ணய உரிமை அளிக்கிறோம் என்று பேசலாமே? முப்பது ஆண்டுகளாக ஈழத்திற்காக நடந்து வரும் போராட்டம் அகதிகளின் அலைவு எல்லாம் வேலை வெட்டியில்லாமலோ அல்லது ஆயுதங்களை விரும்பித் தூக்கவேண்டும் என்பதற்காகவா நடந்தது?

ஏதோ துப்பாக்கி மீதான காதல்தான் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் என்பது போல சித்தரிக்கும் கயமைத்தனத்தை என்னவென்பது? ஆக அரசியல் ரீதியாக ஈழத் தமிழ் மக்களின் சுய உரிமைப் போராட்டம் கொச்சைப்படுத்தப்பதுவதோடு புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அம்மக்கள் சொந்த நாட்டிலேயே இலட்சக் கணக்கில் அகதிகளாக அலைவதும் போரில் மாட்டிக்கொண்டு உயிரைத் துறப்பதும் ஊனமாவதும் தான் இதுவரை உலகம் கண்டறிந்திருக்கிறது. இதற்காகத்தான் முத்துக்குமாரும் முருகதாஸூம் மற்றவர்களும் தன்னுயிரை தீயிற்கு இரையாக்கி உலக நாடுகளை போரை நிறுத்துமாறு கெஞ்சுகிறார்கள்.

இவர்கள் யாரும் புலிகளுக்கு ஆயுதம் தூக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்பதற்காக உயிர் துறக்கவில்லை. உயிர் துறக்கும் ஈழத்து மக்களின் அவலத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்காகத்தான் தங்கள் உயிர்களை அழித்திருக்கிறார்கள். பல ஆயிரம் பேரை களப்பலி கொடுத்திருக்கும் ஈழத்தின் போராட்டத்தை முடித்து விடுதற்கு இந்தியாவும் இலங்கையும் துடித்துக் கொண்டிருக்கின்றன. அதைத்தான் ப.சிதம்பரத்தின் திமிரான பேச்சு வெளிப்படுத்துகிறது.தமிழகத்தில் இத்தனை பெரிய மக்களின் எழுச்சிக்குப் பிறகும் காங்கிரசு கட்சி தனது துரோகக் கொள்கையை கூட்டம் போட்டு பேசுகிறது என்றால் தமிழ் மக்கள் என்ன இளித்தவாயர்களா?

எதிரிகளைக் கூட போரில் சந்தித்து வெல்ல முடியும். ஆனால் உள்ளிருந்தே துரோகம் செய்யும் இந்தக் கருங்காலிகளை ஈவிரக்கமின்றி வீழ்த்த வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களுக்கு கொஞ்சமாவது சுரணை இருக்கிறது என்று நீருபிக்க முடியும்.காங்கிரசின் இந்த அடிவருடிக் கொள்கை தான் எல்லாக் கட்சிகளும் வெவ்வேறு அளவுகளில் ஏற்றுக் கொண்டு நடித்து வருகின்றன. கருணாநிதி ஈழத்திற்காக ஒன்றும் செய்யவில்லை. இந்திய அரசின் கொள்கை என்பது கட்சிகளின் நலனுக்கு அப்பாற்பட்டு இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்காக தீர்மானிக்கப்படுகிறது. இதில் காங்கிரசு ஈழத்திற்கு துரோகம் புரிகிறது. ப.சிதம்பரத்தின் பேச்சை வைத்துப் பார்க்கும் போது அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் வந்தால் விளக்குமாறு வரவேற்பு கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.

சிறீலங்காவின் உண்மை நண்பன் இந்தியா - அமைச்சர் நிமால் பாராட்டு

உலகின் பல நாடுகள் இங்கு நடப்பது தெரியாது எமக்கு பல கட்டளைகள் போடுகின்றது, ஆனால் இந்தியா எமது நிலையை நன்கு புரிந்து கொண்ட நண்பனாக செயற்பட்டு வருகின்றது என சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சிமால் சிறீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து சிறீலங்கா சென்றுள்ள இந்திய இராணுவ மருத்துவக் குழுவினரைச் சந்தித்து அவர்கள் கொண்டு சென்றுள்ள மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் இக்கருத்தை அவர் தொவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் உலக நாடுகள் பல சிறீலங்காவின் நிலையை புரிந்து கொள்ளாது எம்மை அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே, அதைக்கைவிடு, இதைக்கைவிடு என தொடர்ந்து அழுத்தம் தந்துகொண்டு இருக்கையில் இந்தியா எதுவும் பேசாது தானாக எமக்கு உதவ முன்வந்துள்ளது.

இந்தியா முன்னரும் உதவியுள்ளது. இந்தியாதான் எமது உண்மை நண்பன் அவர்களுக்கு எமது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

இதே நிகழ்வில் கருத்து தெரிவித்துள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத், சிறீலங்கா மற்றும் இந்தியாவின் நெருங்கிய உறவின் வெளிப்பாடே இந்த உதவி எனவும், இதில் இருந்து சிறீலங்கா இந்தியாவிற்கிடையான நெருக்கமான உறவைப்பற்றி புரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்.

தமது மருத்துவப்படை எத்தகைய சவால்களையும் சந்திக்கும் வலுப்பெற்றது எனவும், அவர்கள் முழுமையான மருந்து மற்றும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளனர் எனவும் அலோக் கூறினார்.

சிறீலங்காவில் போர் உச்சமடைந்து தமிழர் தாயகப் பகுதிகளில் சிறீலங்கா படைகளின் எறிகணை மற்றும் கொத்துக்குண்டு வீச்சில் சிக்கி தினமும் பல மக்கள் மடிந்து கொண்டுள்ள நிலையில் இந்தியா மருத்துவ உதவிகளை வன்னிக்குள் அனுப்பாது சிறீலங்காவிற்குள் அனுப்பியுள்ளதன் மூலம் தமிழின அழிப்புக்கு முண்டு கொடுத்து நிற்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலெறித் தளத்தை கைப்பற்றி இராணுவ நிலைகள் மீது புலிகள் தாக்குதல்

சிறிலங்கா படையினரின் பல கிலோ மீற்றர் தூரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதுடன் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த படையினரின் பீரங்கி நிலைகளையும் கைப்பற்றியுள்ளனர் என்று கொழும்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மதியம் வரை கிளாலி, பளை, முகமாலை இராணுவ இலக்குகளை நோக்கி விடுதலைப் பலிள் கடுயைமயான எறிகணைத் தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா படையினர் இந்த வாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர். படையினரின் 58 ஆவது டிவிசன் படையணியின் முன்னணி நிலைகளை தகர்த்தவாறு விடுதலைப் புலிகளின் 600 உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளனர். விடுதலைப் புலிகளின் இந்த பெருமெடுப்பிலான ஊடுருவல் காரணமாக ஏ-9 பாதையின் ஊடான படையினரின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை மீள கைப்பற்ற முடியாத நிலையில் 58 ஆவது டிவிசன் படையணி உள்ளது. படையினரின் பிரதேசத்திற்குள் 12 கிலோ மீற்றர் தூரம் வரை ஊடுருவிய விடுதலைப் புலிகளின் அணிகள் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த பீரங்கி தளத்தை கைப்பற்றியுள்ளனர்.

அங்கிருந்த 130 மி.மீ பீரங்கிகள் மூன்றை கைப்பற்றி அதனைக்கொண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மட்டும் நடைபெற்ற மோதல்களில் 200 படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 10, 2009

நாம் எங்கோ செல்கிறோம்…


பெற்ற பிள்ளையை, வறுமையின் காரணமாக தெருவிலும், குப்பையிலும் வீசிச் செல் லும் தாயை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், பள்ளி வாசமே இல்லாத 10 வயது சிறுமி, பெற்றோருக்கு ஐந்து ஆண்டுகளாக மூன்றுவேளை சோறிட்டு வருகிறாள்; இவளது மூலதனம் ஒரே ஒரு கயிறு. மேட்டுப்பாளையம், அண்ணாஜிராவ் ரோடு; வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த பகுதி. எப்போதும் "படுபிசி'யாகவே இருக்கும்.


இங்கு, தரையில் இருந்து 5 அடி உயரத்தில், 10 அடி நீளத்தில் கட்டப்பட்டிருக்கிறது கயிறு. அதன் மீது, எவ்வித அச்சமும் இல்லாமல் கையில் நீளமான குச்சியை பிடித்து, "பாலன்ஸ்' செய்தபடி சர்வசாதாரணமாக குறுக்கும், நெடுக்குமாக நடைபோடுகிறாள் 10 வயது சிறுமி. இடையிடையே கயிற்றின் மீது நின்றவாறு "டான்சும்' ஆடுகிறாள்; தவறி விழுந்தால்... நடப்பதோ வேறு. கயிற்றின் மீது நடக்கும் சிறுமியை உற்சாகப்படுத்த தரையில் அமர்ந்தபடி ஆணும், பெண்ணும் சாப்பாட்டு தட் டில் குச்சியை பலமாக அடித்து "இசை முழக்கம்' வேறு செய்கின்றனர். அருகில், மற்றொரு சிறுவன், வாத்தியத்தை முழக்குகிறார். இந்த ஒலி அருகில் இருப் போரை அழைக்கிறது.


ஏழைகளின் வயிற்று பிழைப் புக்கான இந்த சாகசக்காட்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் அவ்வப்போது நிகழ்கிறது என்றாலும், ரசிகர்களுக்கு குறைவில்லை. தாளம் கேட்க ஆரம்பித்ததும், கூடிநின்று சிறுமியை ஒரு வித பரபரப்புடன், ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்க்க துவங்கிவிடுகின்றனர். கயிற்றின் மீது நடக்கும் போது, ஒரு காலில் இருந்த செருப்பை லாவகமாக கழற்றி கீழே விடுகிறாள். ஒரு காலில் செருப்பு, மறுகாலில் அலுமினிய சாப்பாட்டு தட்டை கயிற்றின் மீது வைத்தபடி முன்னும், பின்னுமாக நடக்கிறாள். இது போன்ற பல சாகசங்களை கயிற்றின் மீது நிகழ்த்தியபின், தரையில் குதித்து பாத்திரத்தை கையில் ஏந்தியபடி, கூடியிருப்போரிடம் சில்லரை கேட்கிறாள்.

நீண்ட நேரம் ரசிக்க வைத்தாளே... என நினைத்து பலரும் நாணயங்களை தட்டில் போடுகின்றனர். சிலர், ரசிக்க மட்டும் செய்துவிட்டு "நாணயமின்றி' கைவிரித்து நழுவிச் செல்கின்றனர். "கயிறு சாகசக்காரி' சிறுமி கீர்த்தி(10) கூறுகையில், ""நாங்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.ஐந்து ஆண்டுகளாக ஊர், ஊராகச் சென்று இது போன்ற சாகசம் செய்து, கிடைக்கும் சில்லரை காசுகளை கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை தேறும். இரவில், கோவில், பஸ் ஸ்டாண்ட் என ஏதாவது ஓரிடத்தில் படுத்து தூங்குவோம். மறுநாள் மீண்டும் கிளம்பிவிடுவோம். நான் பள்ளிக்கு போனதில்லை; வகுப்பறை எப்படி இருக்கும் என்றே தெரியாது,'' என்றார்.

வக்கீல்களுக்கு ஆயுதப்பயிற்சி

மதுரை : தற்காப்புக்காக வக்கீல்களுக்கு ஆயுதப்பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது. இதற்காக நிதி குவியத் துவங்கியுள்ளது. மதுரை மாவட்ட வக்கீல்கள் சங்க மறு பரிசீலனை பொதுக்குழு கூட்டம் துணை செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்தது. செயலாளர் ஏ.கே. ராமசாமி முன்னிலை வகித்தார். தீர்மானங்கள்: வக்கீல்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடக்கும். அத்துமீறல் சம்பவங்கள் நடப்பதால் தற்காப்புக்காக வக்கீல்கள், குமாஸ்தாக்களுக்கு கராத்தே, சிலம்பாட்டம், துப்பாக்கி சுடும் பயிற்சி இலவசமாக அளிக்கப்படும்.

போலீஸ் மற்றும் அரசுத் துறையில் லஞ்சம், சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் நிலவுகிறது. அதைக் கட்டுப்படுத்த சங்கம் சார்பில் தனி புலனாய்வு பிரிவு முறைப்படி அமைக்கப்பட வேண்டும். வக்கீல்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி கேட்டு மனு செய்யப்படும். தற்காப்பு பயிற்சிக்காக வக்கீல்கள் முருகதாஸ், மனோகரன் ஆகியோர் தலா ரூ.5,000 சங்கத்துக்கு வழங்கியுள்ளனர். மேலும் பல வக்கீல்கள் நிதி வழங்கவுள்ளனர்.

போராட்டம் தொடர்பான மறுபரிசீலனை கூட்டம் வரும் 12ம் தேதி நடத்தப்படும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. துணை செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

இந்திய மொழிகளில் அகராதிக் கலை

சென்னை : "இந்திய மொழிகளில் அகராதிக் கலை' பற்றிய தேசிய கருத்தரங்கம் சென்னையில் வரும் 26ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனம் சார்பில், "இந்திய மொழிகளில் அகராதிக் கலை' பற்றிய தேசிய கருத்தரங்கம் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை மூன்று நாட்களில் நடக்கவுள்ளது. தேசிய அளவில் பல மொழிகளை சேர்ந்த அறிஞர்கள் பலர் ஒன்றுகூடி, இந்திய மொழிகளில் அகராதிக் கலை தொடர்பான சிக்கல்கள் மற்றும் நோக்கங்கள் பற்றி விவாதிக்க இக்கருத்தரங்கம் நடக்கிறது.

மூன்று நாட்கள் நடக்கவுள்ள இக்கருத்தரங்கில், தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, இந்தி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி, அசாமி, ஒரியா போன்ற பல இந்திய மொழிகளை சேர்ந்த அறிஞர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்குகிறார்கள்.

அவரவர் மொழிகளில் அகராதிகள் தயாரித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் நடைமுறை சிக்கல்கள், அகராதிகள் வளர்ச்சி பெற்ற விதம், அகராதிகளை திறம்பட உருவாக்குவதற்கு வேண்டிய வழிமுறைகள், நோக்கங்கள், நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான செயல்முறைகளை அறிஞர்கள் விவாதிக்கின்றனர். மேலும் விவரங்களை ஆசியவியல் நிறுவன இயக்குனர் ஜான் சாமுவேலை, 2450 0831, 2450 2212 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

கொழும்புக்கு அதிக கொழுப்பு

கொழும்பு : "பாகிஸ்தானில் இலங்கை கிரிக் கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது' என, இலங்கை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வெளியுறவுச் செயலர் பலிதா கொகேனோ கூறியதாவது:பாகிஸ்தான், லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டு சதி இருக்கலாம் என முதலில் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. எங்களுக்கும் அந்த சந்தேகம் உள்ளது. விடுதலைப் புலிகளுக்கு இந்த தாக்குதலில் தொடர்பிருக்க வாய்ப்பு உள்ளது.இலங்கையில் தங்களுக்கு எதிராக நடந்து வரும் ராணுவ தாக்குதலில் இருந்து அரசின் கவனத்தை திசை திருப்புவதற்காக, விடுதலைப் புலிகள் இது போன்ற நடவ டிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம்.இவ்வாறு பலிதா கூறினார்.

இலங்கை ராணுவ அமைச்சகம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:விடுதலைப் புலிகளுக்கும்-லஷ்கர் அமைப்புக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, லாகூர் தாக்குதலில் புலிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கிட்டு, கடந்த 1992ல் பெஷாவரில் ஆயுதங்கள் வாங்குவதற்காக பேச்சு நடத்தியதாக வெளியான தகவலை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.இலங்கை கிரிக்கெட் வீரர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு, அதன் மூலம் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு பேரம் பேசுவதற்கான முயற்சிகளில் புலிகள் ஈடுபடலாம் என்றும் எங்களுக்கு தகவல் கிடைத்துள் ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் ஆதரவு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "கடந்த சில நாட்களாக ராணுவத்தின் மீது புலிகள் பீரங்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்' என லாகூரில் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல்: புலிகளை இணைத்து இலங்கை சந்தேகம்தெரிவிக்கப்பட்டுள்ளது.


சலவை இயந்திரமும், பெண்களின் விடுதலையும


வாடிகன் நகரம்: "மேற்கத்திய நாட்டை சேர்ந்த 20ம் நூற்றாண்டு பெண்களின் விடுதலையில் கருத்தடை மாத்திரைகள் மற்றும் வேலை செய்வதற்கான உரிமையை விட, வாஷிங் மிஷின் தான் அதிக பங்காற்றி உள்ளது' என வாடிகன் நகர பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த வாடிகன் பத்திரிகையில் வெளியான, "சலவை இயந்திரமும், பெண்களின் விடுதலையும்' என்ற கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:மேற்கத்திய நாட்டை சேர்ந்த 20ம் நூற்றாண்டு பெண்களின் விடுதலைக்கு எது அதிகமாக உதவியது? என்ற விவாதத்தில் மாத்திரைகள், கருச்சிதைவிற்கான உரிமை,வீட்டிற்கு வெளியே பணியாற்ற அனுமதி என பெண்கள் பல்வேறு கருத்துக்களோடு, வாஷிங் மிஷின் என்ற கருத்தையும் தெரிவித்தனர். அதிலும், துணியில் சலவைத்தூள் போட்டு, உரிய ஏற்பாடுகள் செய்து வாஷிங் மிஷினை இயக்கினால் போதும். சலவை செய்யும் வேலை முடியும். வாஷிங் மிஷின் துவைக்கும் போது, வேண்டியவர்களுடன் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே காபி குடிக்கலாம் என்று தெரிவித்திருக்கின்றனர்.இதில் தொடர்ந்து, வாஷிங் மிஷின் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து, இன்றைய நவீன இயந்திரம் வரை விவாதித்தனர். இவ்வாறு அந்த பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது...




விந்தன் மொழிகள்

றிவின் வழியே அறவழி யாகும்

லயம் தொழுவது சாலவும் தீது

றைவன் என்பது இயற்க்கையே யாகும்

சன் என்பவன் நீசனே யாவான்

ன்னிலும் உயர்ந்தவன் ஒருவனும் இல்லை

ழ்வினை என்பது உன்னை ஏய்க்கவே

ல்லாம் உன் செயல் என்பதை நீ அறி

ழை என்பவன் கோழையே ஆவான்

யம் என்பதை அடியேடு ஒழித்திடு

துங்கி நில் என்றால் ஒட்டி நீ நிற்பாய்

துவோரெல்லாம் உயர்ந்தோர் ஆகார்

Monday, March 9, 2009

Charles Darwin


Charles Darwin

Charles Robert Darwin (12 February 1809 - 19- April 1882) demonstrated that all species of life have evolved over time from common ancestors through the process he called natural selection. His theory of natural selection came to be widely seen as the primary explanation of the process of evolution in the 1930s, and now forms the basis of modern evolutionary theory.

His five-year voyage on HMS Beagle established him as an eminent geologist whose observations and theories supported Charles Lyell’s uniformitarian ideas, and publication of his journal of the voyage made him famous as a popular author.

His 1859 book On the Origin of Species established evolutionary descent with modification as the dominant scientific explanation of diversification in nature. He examined human evolution and sexual selection in The Descent of Man, and Selection in Relation to Sex, followed by The Expression of the Emotions in Man and Animals. His research on plants was published in a series of books, and in his final book, he examined earthworms and their effect on soil.

Charles Robert Darwin was born in Shrewsbury, Shropshire, England on 12 February 1809 at his family home, the Mount. His father was a wealthy society doctor and financier Robert Darwin and mother was Susannah Darwin.

Robert Darwin, himself quietly a freethinker.

During his first Beagle voyage, Darwin found three Fuegians on board friendly and civilised, yet their relatives seemed “miserable, degraded savages”, as different as wild from domesticated animals. To Darwin the difference showed cultural advances, not racial inferiority. Unlike his scientist friends, he now thought there was no unbridgeable gap between humans and animals.

On the geologically new Galapagos Islands Darwin looked for evidence attaching wildlife to an older “centre of creation”, and found mocking birds allied to those in Chile but differing from island to island. He heard the tortoise shells slightly varied in shape, showing which island they came from. In Australia, the marsupial rat-kangaroo and the plays seem to unusual that Darwin thought it was most as though two distinct Creators had been at work. He found the Aborigine “good-humoured & pleasant”, and noted their depletion by European settlement.

In mid-December Darwin took lodgings in Cambridge, to organise work on his collections and rewrite his Journal. He wrote his first paper, showing that the South American landmass was slowly rising, and with Lyell’s enthusiastic backing read it to the Geological Society of London on 4 January 1837. On 17 February Darwin was elected to the Council of the Geographical Society and Lyell’s presidential address presented Owen’s findings on Darwin’s fossils, stressing geographical continuity of species as supporting his uniformitarian ideas.

In their first meeting to discuss his detailed findings, Gould told Darwin that the Galapagos mockingbirds from different islands were separate species, not just varieties, and the finch group included the “wrens”.

Darwin was speculating in his Red Notebook on the possibility that “one species does change into another” to explain the geographical distribution of living species such as the rheas, and extinct ones such as Macrauchenia like a giant guanaco.

On the Origin of Species by Means of Natural Selection, or The Preservation of Favoured Races in the Struggle for Life (usually abbreviated to On the Origin of Species) proved unexpectedly popular, with the entire stock of 1,250 copies oversubscribed when it went on sale to booksellers on 22 November 1859. His only allusion to human evolution was the understatement that “light will be thrown on the origin of man and his history. His theory is simply stated in the introduction:

As many more individuals of each species are born than can possibly survive; and as, consequently, there is a frequently recurring struggle for existence, it follows that any being, if it vary however slightly in any manner profitable to itself, under the complex and sometimes varying conditions of life, will have a better chance of surviving, and thus be naturally selected. From the strong principle of inheritance, any selected variety will tend to propagate its new and modified form.

He put a strong case for common descent, but avoided the then controversial term “evolution”, and at the end of the book concluded that :

There is a grandeur in this view of life, with its several powers, having been originally breathed into a few forms or into one; and that, whilst this planet has gone cycling on according to the fixed law of gravity, from so simple a beginning endless forms most beautiful and most wonderful have been, and are being, evolved.

The Church of England’s response was mixed. Darwins old Cambridge tutors Sedgwick and Henslow dismissed the ideas, but liberal clergymen interpreted natural selection as an instrument of God’s design, with the cleric Charles Kingsley seeing it as “just as noble a conception of Deity”. In 1860, the publication of Essays and Reviews by seven liberal Anglican theologians diverted clerical attention from Darwin, with its ideas including higher criticism attacked by church authorities as heresy. In it, Baden Powell argued that miracles broke God’s laws, so belief in them was atheistic, and praised “Mr. Darwin’s masterly volume supporting the grand principle of the self-evolving powers of nature.”

In a legendary confrontation at the public 1860 Oxford evolution debate during a meeting of the British Association for the Advancement of Science, the Bishop of Oxford Samuel Wilberforce, though not opposed to transmutation of species, argued against Darwin’s explanation.

Even Darwin’s close friends Gray, Hooker, Huxley and Lyell still expressed various reservations but gave strong support, as did many others, particularly younger naturalists.

The Origin of Species was translated into many languages, becoming a staple scientific text attracting thoughtful attention from all walks of life, including the “working men” who flocked to Huxley’s lecture.

Darwin’s evolution-related experiments and investigations clulminated in books on the movement of climbing plants, insectivorous plants, the effects of cross and self fertilisation of plants, different forms of flowers on plants of the same species, and The Power of Movement in Plants. In his last book, he returned to the effect earthworms have on soil formation.

Darwing continued to play a leading part in the parish work of the local church, but from around 1849 would go for a walk on Sundays while his family attended church. Though reticent about his religious views, in 1879 he responded that he had never been an atheist in the sense of denying the existence of a God, and that generally “an Agnostic would be the more correct description of my state of mind.”

He died in Downe, Kent, England, on 19 April 1882. He was given a state funeral and buried in Westminister Abbey, close to John Herschel and Issac Newton. Only five non-royal personages were granted that honour of a UK state funeral during the 19th century.

Darwin 2009 commemorations

Darwin Day has become an annual celebration, and the bicentenary of Darwin’s birth and the 150th anniversary of the publication of On the Origin of Species are being celebrated by events and publications around the world. The “Darwin” exhibition, after opening at the American Museum of Natural History in New York City in 2006, was shown at the Museum of Science, Boston, the Field Museum in Chicago, the Royal Ontario Museum in Toronto, then from 14 November 2008 to 19 April 2009 in the Natural History Museum, London, as part of the Darwin 200 programme of events across the United Kingdom. The University of Cambridge features a festival in July 2009. His birth place is celebrating with “Darwin’s Shrewsbury 2009 Festival” events during the year.

In the United Kingdom a special commemorative issue of the Two Pound coin shows a portrait of Darwin facing an ape surrounded by the inscription 1809 Darwin 2009, with the edge inscription ON THE ORIGIN OF SPECIES 1859. Collector versions of the coin will be released at a premium, and during the year the coins will be available from banks and post offices at face value.

In September 2008, the Church of England issued an article saying that the 200th anniversary of his birth was a fitting time to apologise to Darwin “for misunderstanding you and, by getting out first reaction wrong, encouraging others to misunderstand you still.”

மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்

மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்.

மனிதனுக்குள் கடவுளைப் புகுத்துவது மனிதனை முட்டாளாக்கும் டானிக்
(வைட்டமின் சத்து) ஆகும். இதை இன்று பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள்
கடவுள் பிரசாரம் செய்வதில் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தே
தெரிந்து கொள்ளலாம்.

கடவுள் மனித நலத்துக்காகக் கண்டு பிடித்த சாதனம் அல்ல. மனிதனை
முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தும் சாதனமேயாகும். சூரியனை, சந்திரனை
நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும்
கண்டுப்பிடிக்கவில்லை. அவற்றின் பெயர்களைத்தான் மனிதன் தெரிந்து
கொண்டான்.

இவற்றிற்கு விளக்கம் தேவை இல்லை. காரண காரியங்கள் தேவையில்லை. மனிதன்
என்றால் இவைகளை அறிந்தே ஆகவேண்டும். இவற்றின் பலனை அனுபவித்தே ஆக
வேண்டும்.

ஆனால், கடவுள் அப்படி அல்ல; ஒருவன் சொல்லி அதுவும் சொல்லுவது
மாத்திரமல்ல, நம்பும்படி செய்து, நம்பும்படி செய்வது மாத்திரமல்ல,
நம்பும்படி கட்டாயப்படுத்தி மனித மூளைக்குள் புகுத்தியாக வேண்டும்.

இந்தக் கதி சர்வ சக்தியுள்ள "கடவுளுக்கு" ஏற்பட்டது பரிதாபம்! மகா
பரிதாபம்!

கடவுள் கதை ஒரு முட்டாளுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே
பாழாக்கிவிட்டது. அதாவது சிறு குழந்தை கையில் கிடைத்த நெருப்புப்பந்தம்
வீட்டையே, ஊரையே எரித்து சாம்பலாக்கியது என்பது போல் கடவுள் எண்ணம்
அறிவையே கொன்று விட்டது என்று சொல்லலாம்.

கடவுள் என்பது "பிடிக்குப்பிடி நமசிவாயம், (நமசிவாயம் என்றால், இங்கு
ஓன்றும் இல்லை; சூனியம் என்றுதான் பொருள்)


அது "கடவுள்" என்றால் ஒரு "சக்தி," "சக்தி கூட அல்ல;" "ஒரு காரணம்"
"காரணப் பொருள்கூட அல்ல" அப்படி நினைப்பது, நினைத்துக் கொள்வது
மனிதனுக்கு ஒரு "சாந்தி" என்பதாக கா.சு.வும் ( M.L .பிள்ளை),
திரு.வி.க.வும் சொன்ன விளக்கம் - இதை பழைய "குடிஅரசு" இதழில் காணலாம்.
ஆனாலும் இவர்கள் விக்கிரக பூசையும், பட (உருவ) பூசையும் செய்து
வந்தார்கள். கடைசியாக மாற்றிக் கொண்டார்கள்.


மனிதனுக்கு எதற்காக கடவுள் தேவைப்பட்டது என்பது எனக்கு இன்னமும்
விளங்கவில்லை. அதிலும், கடவுளை நம்பும் எவனும் அதன் சர்வ சக்தியில்
நம்பிக்கை வைப்பதே இல்லை. எவனும் சம்பிரதாயத்திற்காக "கடவுள் செயல்"
என்கிறானே தவிர, காரியத்தில் மனிதன் செயல் என்றும், இயற்கை என்றும்,
அகஸ்மாத், தற்சம்பவம், ஆக்சிடெண்ட் என்றும் தான் முடிவு செய்து
கொண்டவனாகிறான்.


சர்வம் கடவுள் செயல் என்று சொல்லுகின்ற எவனும் சர்வத்திற்கும் தற்காப்பு
செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. சர்வம் கடவுள் செயலாயிருக்கும் போது
நாஸ்திகன் - கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச்
சிந்திப்பதில்லை.


மற்றும் சர்வத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள் மக்களுக்கு ஏன் தான்
இருப்பதாக, தன்னைத் தானாகத் தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை என்பதை
சிந்திக்கவே மாட்டேன் என்கிறான்.

கிருஸ்து பாதிரி இந்தக் கேள்விக்குப் பதிலாக "கடவுள் மனிதனுக்கு அறிவைக்
கொடுத்துவிட்டான்; அந்த அறிவைக் கொண்டு கடவுளைத் தெரிந்து கொள்ள
வேண்டியது மனிதன் கடமை" என்று சொல்லிவிட்டார்.

உன் அறிவுக்கு எட்டிய கடவுள் ஏன் என் அறிவுக்கு எட்டவில்லை? என்று
கேட்டதற்கு, "பாபஜன்மங்களுக்கு எட்டாது" என்று சொல்லிவிட்டார்.

அந்த பாபஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால் பாபஜன்மங்களை ஏன்
படைத்தார்? கடவுள் பாபஜன்மங்களைப் படைக்கவில்லையானால், பாபஜன்மங்களைப்
படைத்தது யார்? என்று கேட்டேன்.

"சாத்தான் படைத்தான்" என்றும், மற்றும் அவருக்கே புரியாத எதை எதையோ
யோசித்துப் பேசினார்.


இஸ்லாத்தின் கதியும் இப்படித்தான். இந்துவின் கதியே மும்மூர்த்திகள்
ஓங்காளி, மாரி, காத்தவராயன், மதுரை வீரன், கருப்பண்ணன், ஆழ்வார்கள்,
நாயன்மார்கள், சமாதி, கல்லுகள், படங்கள், பட்சிகள், மிருகங்கள், மரங்கள்,
சாணி (மூட்டை உருவ), உருண்டைகள், செத்துப்போன மனிதர்கள் முதலிய எத்தனையோ
பண்டங்கள் கடவுள்களாக வணங்கத்தக்கவைகளாகவும் இருந்து வருகின்றன.


இவைகளை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஒரு சர்வ சக்தியுள்ள கடவுளுக்குத்
தன்னைப்பற்றித் தெரிவித்துக் கொள்ள – தன் உருவத்தை விளக்க சக்தியில்லை
என்பதைக் காட்டத்தான்.


பிறகு – முன்ஜென்மம் - பின் ஜென்மம், கருமம், விதி, நரகம், சொர்க்கம்,
வைகுண்டம், கைலாயம் இப்படி இன்னும் பல பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினது
போல் உளறல் மேல் உளறல்கள்.



மனிதனுக்குப் பிறகு முதல் சாவுவரை எதத்னையோ துன்பமும், தொல்லையும்,
இருக்க இந்தக் கடவுள் கருமம் மோட்ச – நரகத் தொல்லைகள் ஒருபுறம் மனிதனைச்
சித்திரவதை செய்கிறது. மனிதன் (ஜீவ கோடிகள்) பிறப்புக்கும்,
வாழ்க்கைக்கும், சாவுக்கும் இடையில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், கவலை,
தொல்லை முதலிய காரியங்களுக்கு அவசியம் என்ன? காரணம் என்ன? என்பதை
எவனாலும் இதுவரை தெரிந்து கொள்ள முடியவில்லையே! இத்தனைக்கும் மனிதன்
கழுதை, குதிரை, நாய், நரி, எருமை, யானை, புலி, சிங்கம், ஈ, எறும்பு
முதலான எண்ணிறந்த ஜீவராசிகளைவிட அதிகமான அறிவு (பகுத்தறிவு)
படைத்தவனாவான்.


இந்தப் பகுத்தறிவின் பயனால்தான் மற்ற ஜீவப்பிராணிகளுக்கு இல்லாத தொல்லையை
மனிதன் அனுபவிக்கிறான். காரணம் இந்தப் பாழாய்ப்போன கடவுளால் தான் அதிகத்
தொல்லை என்பேன்.

"உள்ளத்தைப் பங்கிட்டு உண்பது," "உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது" என்ற
நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு, வேலையோ, அவசியமோ இருக்காது.


இப்போது கையில் வலுத்தவன் காரியமாகவும், அயோக்கியன் ஆதிக்கமாகவும்
இருப்பதால், மனிதன் அறிவு இருந்தும் தொல்லைக்கும் துன்பத்திற்கும்
ஆளாகிறான் - அடிமையாக வாழ்கிறான்.


இனி ஒரு அய்ம்பது ஆண்டுக்குள் மனிதனுக்கு சராசரி வயது 100 – ஆகப்
போகிறது. இது உறுதி. இப்பொழுதே பல நாடுகளில் சராசரி மனித வயது

67- முதல் 74- வரை இருந்து வருகிறது. நமது நாட்டில் 1950– ல் சராசரி வயது
32- ஆக இருந்தது. இன்று 50- ஆக ஆகிவிட்டது. இதற்குக் காரணம் 1940– ல்
படித்த மக்கள் நம்நாட்டில் 100– க்கு 9– பேராக இருந்தவர்கள் காமராசர்
முயற்சியால் 100– க்கு 50– பேராக ஆனதுதான். அதோடு கூடவே, "கடவுளும்,"
"கடவுள் செயலும்" வெகுதூரம் குறைந்து மறைந்து வருவதும் தான் என்று
சொல்லுவேன்.

கடவுள் மறைய மறைய மனிதனுக்கு அறிவு வளரும். சுதந்திரம் அதிகமாகும். நமது
பெண்களுக்குப் அந்த பாப ஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால்
பூரண சுதந்திரம் இருக்குமானால் - வாழ்வில் சுயேச்சையும், சமத்துவமும்
ஏற்படுதமானால், மனிதன் அறிவும், ஆயுளும் எல்லை இல்லாமல் வளர்ந்து கொண்டே
போகும்.


இது தான் கடவுள் இரகசியம்.

பெரியாரின் வாழ்க்கை

Life Measure of Thanthai periyar

Life
Year : 94 Years 3 Months and 7 Days
Months : 1,131
Weeks : 4,919
Days : 34,433
Hours : 8,26,375
Minutes 4,95,82,540
Seconds : 297,49,52,400

Travel
Days : 8200
In foreign countries : 302
Distance : 8,20,000 miles
Comparision : 33 times around the world 3 times of the distance between the earth & the moon

Programme & Speech
Programme : 10,700
Period of speech In hours
: 21,400
In days : 891
In minutes : 12,84,000
Seconds : 77,04,000
Note: Had all the speeches been documented in a tape recorder it would be running for 2 years, 5 months and 11 days continuously.