தமிழா தலை நிமிர்...

Saturday, July 18, 2009

இலங்கையில் உள்நாட்டு, வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்கள் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்

இலங்கையில் செயற்படும் உள்நாட்டு வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களைக் கண்காணிப்பதற்கு மகிந்த அரசாங்கம் கடுமையான சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வரவுள்ளதாக அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:குறிப்பாக இத் தன்னார்வ நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் நிதி நடவடிக்கைகள் குறித்தே தீவிரமாகக் கண்காணிக்கப்படும். தன்னார்வ நிறுவனங்கள் வருடாந்த நிதியறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வருடம்தோறும் தங்களது நிறுவனங்களை மீள் பதிவு செய்ய வேண்டும். நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர் சுயவிபரங்கள் மற்றும் நடவடிக்கைள் மீளாய்வு செய்ய வேண்டும். தன்னார்வ நிறுவனங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டால் அவர்களை நாடு கடத்தவும் அரசாங்கம் பின் நிற்காது.தற்பொழுது, இலங்கையில் 696 உள்நாட்டு தன்னார்வ நிறுவனங்களும், 309 வெளிநாட்டுத் தன்னார்வ நிறுவனங்களும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.