தமிழா தலை நிமிர்...

Saturday, July 18, 2009

ஜாதிவாதிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்

காமராஜர் படத்தை ஒரு காங்கிரசார் திறந்து வைத்து அவருடைய அருமை பெருமைகளைப் பாராட்டிப் பேசினால், அது அவரது கடமையாக இருக்கலாம் அல்லது அவர் ஏதாவது பெற்றதற்காக இருக்கலாம் அல்லது பெறலாம் என்கிற ஆசை காரணமாக இருக்கலாம். நான் அவரது படத்தைத் திறக்கிறேன் என்றால், அவர் தமிழகத்திற்கு நன்மை என்பதற்காக, அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்துதான் உன்னதமான மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மூதறிஞர்-கள் கூறியிருக்கிறார்கள். வைரம் என்பது நீண்ட நெடுங்காலத்திற்குப் பூமியின் அழுத்தத்தால் கீழே அடங்கி நடுங்கிக் கிடந்த கரித்துண்டு-தான். அதுபோல நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து தோன்றிய வைர மணிகளில் ஒருவரே காமராஜர். அவர் மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர் என்றாலும் அவரை நான் போற்றுவதற்கு இது ஒரு காரணம் என 23.4.1967 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் காமராஜர் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து அப்போது முதல்வரான, பேரறிஞர்அண்ணா ஆற்றிய உரைதான்இது. மாற்றுக் கட்சித் தலைவர்களும் போற்றத்தக்க வகையில் தம் தூய்மையான அரசியல் பணியை அமைத்துக் கொண்டார் காமராஜர்.