தமிழா தலை நிமிர்...

Wednesday, April 8, 2009

சிந்தனைத் துளி

தமிழ்ப்பற்று

குன்றக்குடி அடிகளார் எஸ்.எஸ்.எல்.சி., தேறியவர் இராணுவத்தில் பேருந்து ஓட்டுநராகச் சேர இருந்தார். அவரது தமிழ்ப்பற்று அவரை குன்றக்குடி மடாதிபதி ஆக்கியது.

பதவிக்கு விளக்கம் சொன்ன வள்ளலார்

பசித்திரு!
தனித்திரு!!
விழித்திரு!!!

இதுதான் காமராஜ் பாணி

அரசுக் கல்லூரியில் ஆ.ளுஉ., இயற்பியல் படிக்க ஒரு மாணவருக்கு சிபாரிசு செய்தார் காமராசர். அப்போது அவர் தமிழக முதல்வர். கல்லூரி முதல்வரோ, இயற்பியல் படிக்க 12 பேருக்கு மட்டுமே லேப் வசதி இருப்பதால் , காமராசர் சிபாரிசு செய்த மாணவன் 13ஆவது நபர் என்பதால் செய்வதறியாது கைபிசைந்தார்.
காமராசர் ஒரு யோசனைசொன்னார். 12 பேருக்கு மட்டுமே சமைக்கப் பாத்திரம் இருக்க, திடீரென 22 பேர் விருந்தினர் வந்தால் இரண்டு முறை சமைக்க மாட்டோமா? அப்படிச் செய்யுங்க! - என்றார். இப்படித்தான் கல்லூரி களில் ஷிப்ட் முறை (Shift System) வந்தது?


அப்பனுக்கு அப்பன்!

உலகப் போர் முடிந்து மூவரும் கூடினர்.

சர்ச்சில்: கடவுள் கனவில் தோன்றி நடந்து முடிந்தபோரின் வெற்றிக்கு காரணம் உன் ராஜதந்திரமே என்றார்.

ரூஸ்வெல்ட்: நிச்சயமா அப்படி இருக்க முடியாது. ஏனெனில் கடவுள் என் கனவில் வந்து அமெரிக்கா தந்த போர்க் கருவிகள்தான் வெற்றிக்கு காரணம் என்றாரே!

ஸ்டாலின்: நான் யாருடைய கனவிலும் வரவில்லையே!