தமிழா தலை நிமிர்...

Sunday, March 29, 2009

வன்னியில் இன்று 16 சிறுவர்கள் உட்பட 49 தமிழர்கள் படுகொலை

வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி சிங்கள படையினர் இன்றும் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 16 சிறுவர்கள் உட்பட 49 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வலைஞர்மடத்தில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளன் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அம்பலவன்பொக்கணையில் உள்ள பிள்ளையார்கோவில் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால், இடைக்காடு மற்றும் பச்சைப்புல்மோட்டைப் பகுதிகளை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 125 பேர் படுகாயமடைந்துள்ளனர்