தமிழா தலை நிமிர்...

Thursday, March 12, 2009

அமெரிக்காவே இலங்கையை நம்பாதே. -பழா.நெடுமாறன்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வேலூரில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி பேசுகையில்,


முத்துக்குமார் தொடங்கி இதுவரை 10 பேர் இலங்கை தமிழருக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித் துள்ளனர். ஆனால், இந்திய அரசு இதுவரை அங்கு போர் நிறுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இப்பிரச்னையின் விளைவாக நம்மிடையே எழுந்துள்ள இந்த ஒற்றுமை, தமிழர் உணர்வை தொடர்ந்து சரி யான திசையில் கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் இலங்கை தமிழர் மட்டுமல்ல தமிழகத்தின் நீராதார பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான வேளை இப்போது வந்து விட்டது என்றார்.

இலங்கை தமிழர் பிரச்னையில் அந்நாட்டு அரசு கூறும் வார்த்தையை அமெரிக்கா நம்பக்கூடாது என்றார்.